இந்தியாவின் மிகவும் பின் தங்கிய சமுதாயமாகவே இஸ்லாமியச் சமுதாயம்
எப்போதுமே இருந்து வருகிறது . இப்போது கொஞ்சம் நிலைமை மாறி வருவது
மனதுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது . சமீப காலங்களில் பொதுவாகவே முஸ்லிம்களை பற்றி
நிலவி வந்த கணிப்புகள் பொய்யாக்கப்பட்டு வருகின்றன. அதிலும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாக கருதப்பட்ட முஸ்லிம் பெண்கள் தன் சாதனைகள் மூலம் எல்லா விமர்சனங்களையும் சுக்குநூறாக்கி கொண்டிருப்பதைக் காணும் போது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த வரிசையில் போன வாரம் ஓர் சாதனையை படைத்தார் ஓர் இஸ்லாமியப் பெண்மணி - ஸைனப் சயீத்.
2014- ம் ஆண்டு நடந்த UPSC தேர்வுகளில் பீகாரின் முதல் முஸ்லிம் ஐ. பி .எஸ் அதிகாரியாக குன்சா சனோபர் தேர்வு செய்யப்பட்டு வெற்றி வாகை சூடியது நினைவிருக்கும் . இன்று மற்றுமொரு முஸ்லிம் பெண் தன் வெற்றிகளால் இந்திய இஸ்லாமிய சமூகத்தை பெருமையடையச் செய்துள்ளார். அவர்தான் கொல்கத்தாவை சேர்ந்த 25 வயதான ஸைனப் சயீத் . இவர் டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவை சேர்ந்த மாணவி. ஸைனப் 2011-ல் தனது முதுகலைப் படிப்பான மாஸ் கம்யுனிகேசனை ஜாமியாவில் முடித்ததும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான கோச்சிங்கில் முழு மூச்சாக இறங்கினார். ஒரு தவத்தை போல , உலகின் சந்தடிகளில் இருந்து விலகி ,படிப்பில் மூழ்கி மூன்றாவது முறையாக வெற்றி என்னும் முத்தை எடுத்து கரையேறினார்.
நேர்க்காணல் தேர்வில் அதிகபட்சமாக இவர் 275 க்கு 220 ( 80 சதவீதம் ) மதிப்பெண்கள் எடுத்து 107 வது இடத்தை பிடித்துள்ளார். போன வருடம் முதலிடம் பெற்ற இரா சிங்கால் என்ற பெண் 167 மதிப்பெண் பெற்றிருந்தார். அவரை விட கூடுதலாக 58 மதிப்பெண் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார் சகோதரி ஸைனப். பிரிலிமினரி, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று சுற்றுகளிலும் முதன்மையாளராக வந்துள்ளார்..மாஷா அல்லாஹ்..!!
UPSC ( Union Public Service Commission ) என்பது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட இந்திய அரசுப் பணிகளுக்கான தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பாகும். இதில் சிவில் சர்வீஸ்க்கான தேர்வில் தான் ஸைனப் சாதனை நிகழ்த்தினார்.
2014- ம் ஆண்டு நடந்த UPSC தேர்வுகளில் பீகாரின் முதல் முஸ்லிம் ஐ. பி .எஸ் அதிகாரியாக குன்சா சனோபர் தேர்வு செய்யப்பட்டு வெற்றி வாகை சூடியது நினைவிருக்கும் . இன்று மற்றுமொரு முஸ்லிம் பெண் தன் வெற்றிகளால் இந்திய இஸ்லாமிய சமூகத்தை பெருமையடையச் செய்துள்ளார். அவர்தான் கொல்கத்தாவை சேர்ந்த 25 வயதான ஸைனப் சயீத் . இவர் டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவை சேர்ந்த மாணவி. ஸைனப் 2011-ல் தனது முதுகலைப் படிப்பான மாஸ் கம்யுனிகேசனை ஜாமியாவில் முடித்ததும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான கோச்சிங்கில் முழு மூச்சாக இறங்கினார். ஒரு தவத்தை போல , உலகின் சந்தடிகளில் இருந்து விலகி ,படிப்பில் மூழ்கி மூன்றாவது முறையாக வெற்றி என்னும் முத்தை எடுத்து கரையேறினார்.
நேர்க்காணல் தேர்வில் அதிகபட்சமாக இவர் 275 க்கு 220 ( 80 சதவீதம் ) மதிப்பெண்கள் எடுத்து 107 வது இடத்தை பிடித்துள்ளார். போன வருடம் முதலிடம் பெற்ற இரா சிங்கால் என்ற பெண் 167 மதிப்பெண் பெற்றிருந்தார். அவரை விட கூடுதலாக 58 மதிப்பெண் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார் சகோதரி ஸைனப். பிரிலிமினரி, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று சுற்றுகளிலும் முதன்மையாளராக வந்துள்ளார்..மாஷா அல்லாஹ்..!!
ஸைனப் தனது கல்விப் பயணத்தில் தனது பெற்றோர் மற்றும் கணவரின் பங்கு
மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். சிவில் தேர்வுகளுக்கு தயார்
செய்து கொண்டிருக்கும் போதே அவருக்கு திருமணமும் ஆனது . ஸைனபின் கணவர்
ஹுசைன் இசி தன் மனைவி படிப்பதற்கு தேவையான டைம் டேபிள் தயார் செய்வது போன்ற
உதவிகளால் அவரை உற்சாகமூட்டி வந்துள்ளார்.
தனது வெற்றிக்கு உதவிய ஜாமியா மற்றும் ஜகாத் பௌண்டேசன் போன்ற சிறந்த கோச்சிங் சென்டர்கள் நாடு முழுவதும் அதிகமாக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த ஸைனப் ,நமது முஸ்லிம் பெண்களை நன்றாக படிக்க அனுமதித்தால் அவர்களும் சிவில் சர்விஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று நமது இஸ்லாமிய சமுதாயம் முன்னிலைக்கு வரும். பெண்களுக்கு கல்வியை வழங்குவதோடு வழிகாட்டுதலும் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
தனது முதல் விருப்பமாக ஐ.ஏ.எஸ் பணியை தேர்வு செய்துள்ள ஸைனப் , அடுத்ததாக ஐ.ஆர்.எஸ் பணியை விரும்புவதாக தெரிவித்தார். இவர் தனது ஹிஜாபுடனேயே இவை அனைத்தையும் சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேர்காணலின் போது அவரிடம் பல சுவாரசிய கேள்விகள் கேட்கப்பட்டது. அவர் ஹிஜாப் அணிவது பற்றி நேர்காணலில் கேள்வி எழுப்பிய போது அவர் பணிவாகச் சொன்னது என்னவென்றால், ஒருவர் தனக்கு செளகரியமான ஆடையை அணிவது அவருக்கான சுதந்திரம் தானே?! நம் பிரதமர் தனக்கு வசதியான ஆடையாக தனது டர்பனை அணிவதும் மத அடையாளம்தானே" என்று கூறினார். அல்ஹம்துலில்லாஹ்.
எல்லாம் வல்ல இறைவன் , இச்சகோதரி மூலம் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் பயன்கள் கிடைக்கச் செய்வானாக. ஆமீன்
உங்கள் சகோதரி,
நதிரா
---------
தகவல் உதவிக்கு நன்றி: இந்தியா டுடே
தனது வெற்றிக்கு உதவிய ஜாமியா மற்றும் ஜகாத் பௌண்டேசன் போன்ற சிறந்த கோச்சிங் சென்டர்கள் நாடு முழுவதும் அதிகமாக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த ஸைனப் ,நமது முஸ்லிம் பெண்களை நன்றாக படிக்க அனுமதித்தால் அவர்களும் சிவில் சர்விஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று நமது இஸ்லாமிய சமுதாயம் முன்னிலைக்கு வரும். பெண்களுக்கு கல்வியை வழங்குவதோடு வழிகாட்டுதலும் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
தனது முதல் விருப்பமாக ஐ.ஏ.எஸ் பணியை தேர்வு செய்துள்ள ஸைனப் , அடுத்ததாக ஐ.ஆர்.எஸ் பணியை விரும்புவதாக தெரிவித்தார். இவர் தனது ஹிஜாபுடனேயே இவை அனைத்தையும் சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேர்காணலின் போது அவரிடம் பல சுவாரசிய கேள்விகள் கேட்கப்பட்டது. அவர் ஹிஜாப் அணிவது பற்றி நேர்காணலில் கேள்வி எழுப்பிய போது அவர் பணிவாகச் சொன்னது என்னவென்றால், ஒருவர் தனக்கு செளகரியமான ஆடையை அணிவது அவருக்கான சுதந்திரம் தானே?! நம் பிரதமர் தனக்கு வசதியான ஆடையாக தனது டர்பனை அணிவதும் மத அடையாளம்தானே" என்று கூறினார். அல்ஹம்துலில்லாஹ்.
எல்லாம் வல்ல இறைவன் , இச்சகோதரி மூலம் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் பயன்கள் கிடைக்கச் செய்வானாக. ஆமீன்
உங்கள் சகோதரி,
நதிரா
---------
தகவல் உதவிக்கு நன்றி: இந்தியா டுடே